செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. 1972 முதல் 2009ம் ஆணடு வரை நடந்த போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் இப்போர் முடிவுக்கு வந்தது. தற்போது தமிழர்கள் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்திய முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத குவியலை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.1 லட்சத்து 20 ஆயிரம் ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் மற்றும் 8 ரவுண்டு மற்ற ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளது.இந்த ஆயுதங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே புதைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கடற்படை செய்தி தொடர்பாளர் கோசலா வர்னகுல சூரியா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் மிக அதிக அளவிலான ஆயுத குவியல் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, இறுதிக் கட்ட போர் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது என இலங்கை அரசு அலறுகிறது. இதை மனித உரிமைகள் குழு கடுமையாக மறுத்துள்ளது.தமிழர்கள் பகுதியில் தொடர்ந்து ராணுவத்தை குவிக்க இலங்கை அரசு இதுபோன்ற பொய் குற்றச் சாட்டுகளை கூறி நாடகமாடி வருகிறது. விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி வருகிறார்கள் என்ற பீதியை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி