செய்திகள்,திரையுலகம் ஆருஷி கொலை வழக்கு பற்றிய படத்தை வெளியிட தடை!…

ஆருஷி கொலை வழக்கு பற்றிய படத்தை வெளியிட தடை!…

ஆருஷி கொலை வழக்கு பற்றிய படத்தை வெளியிட தடை!… post thumbnail image
மும்பை:-வீட்டு வேலைக்காரரை காதலித்தார் என்பதற்காக பெற்ற மகள் ஆருஷியை கவுரவ கொலை செய்தனர் அவரது பெற்றோர்கள். சொந்த மகளை கொலை செய்ததற்காக டாக்டர் ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நுபுர் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இருவரும் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆருஷி கொலை வழக்கை மையமாக கொண்டு இந்தியில் ‘ரகஷியா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது.இந்தப் படம் எங்கள் பெயரை களங்கப்படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர்.

எனவே படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் தம்பதிகள் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். இதன் மீதான இறுதி உத்தரவை அடுத்த மாதம் 13ம் தேதி கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி