செய்திகள்,திரையுலகம் நடிகர் சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டாரின் ரசிகர்கள்!…

நடிகர் சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டாரின் ரசிகர்கள்!…

நடிகர் சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டாரின் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-காமெடி நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்தபோது ஏராளமான ரசிகர்களை திரட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால், அவர் மோசடி வழக்கில் ஜெயில் கம்பிகளை எண்ணச்சென்று விட்டபோது அவரது ரசிகர்கள் அனைவரும் தெறித்து ஓடிவிட்டனர்.

அப்படி ஓடிய ரசிகர்கள் இப்போது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானத்துக்கு பின்னால் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன் வேலைகளில் துரிதமாக நடந்து வருவதால், விரைவில் படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

தற்போது தான் பிசியாக இருந்தபோதும் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார் சந்தானம்.இதையடுத்து, அவரை சந்தித்து அவரது ரசிகர் மன்றத்தில் தங்களை இணைத்துக்கொள்ள ஏராளமான ரசிகர்கள் சந்தானத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தானத்தின் அலுவலகத்தில் எப்போதும் ரசிகர் கூட்டம் பொங்கி வழிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி