செய்திகள் ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!… post thumbnail image
ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா தயாரானார்.பிரசவ வலி அதிகரித்ததால் அப்பெண்ணுக்கு ஓடும் விமானத்தில் பிரசவம் நடைபெற்றது. இதில் அப்பெண்ணுக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தங்கள் விமானத்தில் இப்பிரசவம் நடைபெற்றதால், போலார் ஏர்லைன்ஸ் விமானம் அப்பெண்ணை கவுரவித்து பின் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி