அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்… post thumbnail image
புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் ஆ.ராசா கடந்த 3–ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

அவரிடம் நீதிபதி அளித்த 1,718 கேள்விகளுக்கான பதிலை எழுத்துப் பூர்வமாகவும், வாய் மொழியாகவும் ஆ.ராசா தெரிவித்தார்.கனிமொழி எம்.பி.யிடமும் 1,718 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதற்கான எழுத்துப்பூர்வமான பதிலை இன்று கோர்ட்டில் வாக்கு மூலமாக பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக கனிமொழி எம்.பி. இன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவரது பதில் அடங்கிய எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை பென் டிரைவ்ல் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். நீதிபதி ஓ.பி. வானதி முன்பு அது பதிவு செய்யப்பட்டது.கலைஞர் தொலைக் காட்சியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டியும் தனது வாக்கு மூலத்தை இன்று பதிவு செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி