லண்டன்:-இங்கிலாந்தின் முன்னாள் நெ.1 டென்னிஸ் வீராங்கனை ‘எலெனா பல்டாச்சா‘ உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் பிறந்த இவர், தனது தந்தை இங்கிலாந்தில் பிரபல தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்த வேளையில் அந்நாட்டில் குடியேறினார். 1997ம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக தனது சகாப்தத்தை தொடங்கினார்.
2010ம் டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் 49வது இடத்தை பிடித்த இவர், இங்கிலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் முதல் இடத்தை அடைந்தார். 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டில் பங்கேற்ற எலெனா பல்டாச்சா, அதன் பின்னர் ஏற்பட்ட மூட்டுக் காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயிற்சியாளரை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு ஈரல் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி