செய்திகள்,முதன்மை செய்திகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம்!…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம்!…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம்!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்பட்டுள்ளது.அதிகாலை 5.18 மணியளவில் மத்திய டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள இஷு ஓஷிமா தீவுகளில் இந்த பூகம்பம் மையப்பகுதி அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பூகம்பத்தின் அளவு பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தால் இழப்பீடு ஏதும் ஏற்பட்டுள்ளதா என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இதன் தாக்கம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறினர்.இந்த பூகம்ப தாக்குதல் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி