செய்திகள் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு!…

கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு!…

கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு!… post thumbnail image
அபுதாபி:-ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் வீட்டு வேலை செய்து வந்த ஆசியக் கண்டத்தை சேர்ந்த ஒரு பெண், சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதனையடுத்து, ஆஸ்பத்திரியில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அன்னிய ஆடவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அபுதாபி கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது தனக்கு தெரிந்த ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அந்நாட்டின் சட்டங்களின்படி, அந்தப் பெண்னை கல்லால் அடித்துக் கொல்லும்படி நீதிபதி உத்தரவிட்டார்.தண்டனையை எதிர்த்து அந்த பெண் மேல் முறையீடு செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், அந்தப் பெண் ஆசியக் கண்டத்தில் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி