செய்திகள்,திரையுலகம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்த நடிகை பூனம்பாண்டே கைது!…

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்த நடிகை பூனம்பாண்டே கைது!…

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்த நடிகை பூனம்பாண்டே கைது!… post thumbnail image
மும்பை:-மும்பையைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி பூனம் பாண்டே.இந்திப் படங்களில் நடித்துள்ளார்.ஐ.பி.எல். போட்டியில் 2012ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதும் தனது டுவிட்டரில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு வெளியான ‘நஷா’ இந்திப் படத்தில் மாணவனுடன் தகாத உறவு வைத்திருக்கும் ஆசிரியையாக நடித்து இருந்தார். இந்தப் படத்துக்கு மும்பையில் எதிர்ப்பு கிளம்பியது.என்றாலும் பூனம் பாண்டே பயப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்தார்.இந்நிலையில் நேற்று இரவு மும்பை மீரா ரோடு பகுதியில் நடிகை பூணம் பாண்டே கார் நின்று இருந்தது. அதில் பூனம் பாண்டே மட்டும் இருந்தார். இரவு 10.30 மணி முதல் 11 மணி முதல் வரை நீண்ட நேரம் கார் நின்று கொண்டே இருந்தது. ஆண் துணை இல்லாமல் தனியாக இருந்தார். யாருடைய வருகையையோ எதிர் பார்த்து காத்திருந்தது போல் இருந்தது.

இதை கவனித்த போலீசார் பூனம் பாண்டேயிடம் ஏன் நீண்ட நேரம் காத்திருக் கிறீர்கள் என்று விசாரித்தனர். அதற்கு அவர் சரியான பதில் கூறாமல் பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்.இதையடுத்து பூனம் பாண்டேயை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மும்பை போலீஸ் சட்டம் 110, 117 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பிரபுல்வாக் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி