செய்திகள் நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…

நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…

நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!… post thumbnail image
நைஜீரியா:-நைஜீரியாவில் போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணியில் நைஜீரிய போலீஸார் ஈடுபட்டிருந்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரையும் 12 டாலர் பணத்திற்கு விற்றுவிட்டனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த சிலர் தீவிரவாதிகளிடம் பணம் கொடுத்து பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த காணாமல் போன மாணவிகளின் பெற்றோர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.இதனால் நைஜீரியாவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி