செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…

அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…

அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!… post thumbnail image
சென்னை:-அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், அட்சய திருதியைக்கு, ஒரு கிராம் அளவாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கநகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டில், அட்சய திருதியை, 2 நாட்களில் வந்தது.

முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. 2வது நாளான நேற்று சென்னையில் நகைக்கடைகள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது.பொதுமக்களின் கூட்டத்தை தொடர்ந்து தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று சுமார் 1500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகின.
இந்த ஆண்டு நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சுமார் 2,100 கிலோ அளவுக்கு மேல் தங்க நகைகள் விற்பனையாகி இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி