அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!…

பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!…

பெண் பத்திரிக்கையாளருடன் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங்!… post thumbnail image
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங்கிற்கு தற்போது 67 வயதாகிறது. இவர் தனக்கும் பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக தனது டுவிட்டர் இணையதளம் மூலம் தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதேபோல் அம்ரிதாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும், இருவரும் விவாகரத்துக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அம்ரிதாவுக்கு விவாகரத்து கிடைத்த பின் அதிகாரப்பூர்வமாக தங்களது தொடர்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள திக் விஜய் சிங், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு நபர்கள் உள்ளே நுழைவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி