செய்திகள்,திரையுலகம் மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,நயன்தாரா!…

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,நயன்தாரா!…

மூன்றாவது முறையாக இணையும் சூர்யா,நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் நயன்தாரா முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சூர்யாவும் நயன்தாராவும் ஏற்கனவே கஜினி, ஆதவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது இருவரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்கள்.நயன்தாரா தற்போது தமிழில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்திலும், உதயநிதி ஜோடியாக ‘நண்பேன்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி