அரசியல்,செய்திகள்,விளையாட்டு துபாயிலிருந்து ராஜ்கோட்டுக்கு ஓட்டுப்போட பறந்து வந்த கிரிக்கெட் வீரர்!…

துபாயிலிருந்து ராஜ்கோட்டுக்கு ஓட்டுப்போட பறந்து வந்த கிரிக்கெட் வீரர்!…

துபாயிலிருந்து ராஜ்கோட்டுக்கு ஓட்டுப்போட பறந்து வந்த கிரிக்கெட் வீரர்!… post thumbnail image
ராஜ்கோட்:-துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் புஜாரா தேர்தலில் தனது வாக்கை செலுத்துவதற்காக ராஜ்கோட்டுக்கு பறந்து வந்துள்ளார்.

குஜராத் மாநில தேர்தல் கமிஷனின் விளம்பர தூதராக உள்ள புஜாரா பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விளம்பரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்களிப்பதற்காகவே துபாயிலிருந்து ராஜ்கோட்டிற்கு வந்த புஜாராவின் செயல் பெருமைக்குரியது என அம்மாவட்ட தேர்தல் அதிகாரியான ராஜேந்திர குமார் கூறியுள்ளார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, புதிய அரசை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அந்த வகையில் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் அனைவரும் தங்களது மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி