செய்திகள் காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!…

காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!…

காதலனுக்கு பயந்து பிறந்த குழந்தையை புதரில் வீசிய பள்ளி மாணவி!… post thumbnail image
சிகாகோ:-சிகாகோ நகர் லோகன் சதுக்கத்தை சேர்ந்தவர் அன ரோசா மோரா. இவர் கெல்வின் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த பிறந்த குழந்தையை ஒரு ஷாப்பிங் பேக்கில் வைத்து வீடு அருகே உள்ள ஒரு புதர் அருகே வைத்து விட்டார்.

மறுநாள் திங்கட்கிழமை மோரா வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் வித்தியாசமாக நடந்து உள்ளார். அவரது நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தெரிவித்தது .உடனடியாக இது குறித்து துப்பறியும் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கபட்டது.துப்பறியும் அதிகாரி அவரது வீடு அருகே பிறந்த குழந்தை ஒன்று கிடந்தது

குறித்து மோராவிடம் விசாரணை நடத்தியதில் முதலில் மறுத்த மோரா பின்னர் அது தனது குழந்தை தான் என்றும்,குழந்தையின் சாயல் தனது பழைய காதலன் போல் இருந்ததால் தற்போதைய காதலனுக்கு பயந்து குழந்தையை பையில் வைத்து புதர் அருகே வைத்ததாக கூறினார்.ஆனால் பிறக்கும் போது உயிருடன் இருந்த குழந்தை பையில் சில மணிநேரம் இருந்ததால் மூச்சுதிணறலால் இறந்து விட்டது.இதை தொடர்ந்து போலீசார் மோராவை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி