அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!…

50 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!…

50 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியா வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!… post thumbnail image
கோலாலம்பூர்:-ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மலேசியா வந்தடைந்தார். கடந்த 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு மலேசியாவிற்கு வருகை தரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க மலேசிய வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் அமெரிக்க தூதரக உயர்அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு ஒபாமா அழைத்துச் செல்லப்பட்டார்.மலேசியாவின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்திக்க உள்ள ஒபாமா அரசினர் மாளிகையில் அளிக்கப்பட உள்ள விருந்திலும் கலந்து கொள்கிறார்.

அவர் மலேசியாவிலுள்ள இளைஞர்களிடம் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே, அதிபர் ஒபாமா மலேசியாவிற்கு வருவதாக இருந்த நிலையில், அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட பிரச்சனையால் அவரது பயணம் தள்ளிப்போடப்பட்டது. ஆனால் சமீபத்தில் மலேசிய விமானம் மாயமான சம்பவத்தையடுத்து ஒபாமாவின் தற்போதைய மலேசிய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி