செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…

பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…

பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24ம் தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில் தெக்சின் அக்தர் கூறியதாவது:-

ஒருநாள் பயிற்சி முகாமில் நான், யாசின் பத்கல், அசமதுல்லா அக்தர், ஜியா உர் ரஹ்மான் ஆகிய 4 பேரும் தற்கொலை தாக்குதல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யாசின் பத்கல், இந்தி திரை உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறினார்.இளைஞர்களை சீரழித்து, தவறான பாதைக்கு வழி நடத்துவதால், அதை தடுக்கும் வகையில் நடிகர், நடிகைகள் கொல்லப்பட வேண்டும் என்றார். மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலோ அல்லது திரையுலக விழாக்கள் நடக்கும் போது இதற்கான தற்கொலை தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அந்த தாக்குதல் மூலம் நிறைய நடிகர், நடிகைகளை கொல்ல முடியும் என்று யாசின் கூறினார்.

திரையுலக பிரமுகர்கள் மீது தாக்குதலுக்கு திட்டமிடுவது சற்று சவாலாக இருந்தது. எனவே நாங்கள் அத்தகைய தாக்குதலுக்கு எந்தவித தேதியோ அல்லது கால நிர்ணயமோ செய்ய வில்லை. இவ்வாறு அவன் கூறினான்.இதையடுத்து எந்தெந்த இந்தி நடிகர்கள், நடிகைகள் மீது தீவிரவாதிகள் குறி வைத்தனர் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி