செய்திகள்,திரையுலகம் ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்து, அதை மோஷன் கேப்சரிங் என்கிற நடிப்பு பதிவாக்கம் முறையில் கோச்சடையான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார்.99 சதவிகித காட்சிகளில் நடித்தது, ரஜினியைப் போல் மிமிக்ரி செய்யும் சின்னத்திரை நடிகர் ஒருவரும், யுவராஜ் என்ற டான்ஸரும் தான்.

ரஜினிக்கு பதில் டூப்புகள் பயன்படுத்தப்பட்ட இந்த விஷயங்களை படு ரகசியமாக வைத்திருந்தனர்.இது பற்றிய தகவல் வெளியானதும் படத்தின் இயக்குநரான சௌந்தர்யாவுக்கு கடும் அதிர்ச்சி.ரகசியமாக வைத்த தகவல் எப்படி வெளியே கசிந்தது என்று திகைத்துப்போனவர், கோச்சடையான் படத்தில் ரஜினிக்காக டூப்பாக நடித்த நடிகர்களை வரவழைத்து இது பற்றி விசாரித்திருக்கிறார்.அது மட்டுமல்ல, ரஜினிக்கு டூப்பாக நடித்தது பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று உத்தரவும் போட்டிருக்கிறார்.

அதோடு, கோச்சடையான் வெளியான பிறகு சக்சஸ் மீட் ஏற்பாடு செய்து அப்போது உங்களை எல்லாம் அழைத்து மீடியாக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்துகிறேன் என்றும் ஆசைவார்த்தைகளைச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி