செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!… post thumbnail image
பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் தேடி வருகின்றன.

விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி மீட்கும் பணியிலும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞைகள் கடந்த 8ம் தேதி கிடைத்ததால், கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் ‘புளூபின்-21’ என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது. இந்த ரோபோ 7 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர்.

எனவே கறுப்பு பெட்டியை தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று ‘ஜாக்’ புயல் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், விமானம் மூலம் தேடும் பணி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக இப்பணிக்கான ஒருங்கிணைப்பு குழுமம் அறிவித்துள்ளது.புயலின் தாக்கத்தால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஆகாய மார்க்கமாக சென்று தேடும்போது நீரினுள் இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரியாது என்பதால் இன்றைய தேடுதல் வேட்டை ரத்து செய்யப்படுவதாக அந்த குழுமத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி