செய்திகள்,திரையுலகம் திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!…

திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!…

திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.

ஜூன் 7ம் தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் 12ம் தேதி திருமணம் நடக்கிறது.அமலா பால் தற்போது தனுஷ் ஜோடியாக ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடிக்கிறார்.

பார்த்திபன் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்கள் கைவசம் உள்ளன.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி