செய்திகள்,திரையுலகம் மணல் புயலால் நடிகை அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு!…

மணல் புயலால் நடிகை அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு!…

மணல் புயலால் நடிகை அனுஷ்காவின் ஷூட்டிங் பாதிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் முதல் படம் ‘என்எச்10‘. நவ்தீப் சிங் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். செப்டம்பர் 12ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன் படப்பிடிப்பு தற்போது வடஇந்திய சமவெளிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவதற்காக செட்டுகள் அமைத்து படக்குழுவினர் தங்கியிருந்தனர். அப்போது திடீரென வீசிய மணல் புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் இருந்த செட் மீது மணல் வாரி இறைக்கப்பட்டதால் படக்குழுவினர் சிக்கிக்கொண்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து இல்லை.

இத்தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்த அனுஷ்கா சர்மா, இதனை மிகவும் பயங்கரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உடல் முழுவதும் அழுக்கு மற்றும் மணல் படிந்ததாகவும் அனுஷ்கா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி