செய்திகள்,திரையுலகம் தேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த நா.முத்துக்குமார்!…

தேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த நா.முத்துக்குமார்!…

தேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த நா.முத்துக்குமார்!… post thumbnail image
சென்னை:-தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் படமாக ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. அப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை எழுதியதற்காக பாடலாசியர் நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.இந்த விருதை அவரது ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக நா.முத்துக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் நான் எழுதிய “ஆனந்த யாழை” பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி