செய்திகள்,திரையுலகம் சூர்யாவுடன் வெங்கட்பிரபு இணையும் படம் துவக்கம்!…

சூர்யாவுடன் வெங்கட்பிரபு இணையும் படம் துவக்கம்!…

சூர்யாவுடன் வெங்கட்பிரபு இணையும் படம் துவக்கம்!… post thumbnail image
சென்னை:-சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் நாயகனாக சூர்யா நடிக்கிறார்.ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று தமிழ் புத்தாண்டு நாளில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா, அவரது அப்பா சிவக்குமார், இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு, ஸ்டண்ட் இயக்குநர் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது சூர்யா, ‘அஞ்சான்‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதனை முடித்த பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி