செய்திகள் அமெரிக்க வாழ் இந்திய கவிஞருக்கு புலிட்சர் விருது!…

அமெரிக்க வாழ் இந்திய கவிஞருக்கு புலிட்சர் விருது!…

அமெரிக்க வாழ் இந்திய கவிஞருக்கு புலிட்சர் விருது!… post thumbnail image
நியூயார்க்:-ஒவ்வொரு ஆண்டும் கவிதை, இசை, நாடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கவிதை பிரிவுக்கான விருது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேக்ஷாத்திரி எழுதிய 3 செக்க்ஷன்ஸ் என்ற கவிதை நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கொலம்பியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் பிறந்த விஜய் சேக்ஷாத்திரி தனது 5வது வயது முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். உலகளவில் கலை இலக்கிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் பரிசை பெறும் 5-வது இந்தியர் விஜய் சேக்ஷாத்திரி ஆவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி