செய்திகள்,திரையுலகம் பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…

பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!…

பேஸ்புக்கின் மகாராணியானார் தீபிகா படுகோனே!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் நட்சத்திரங்களில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் லைக்குளை தாண்டினார்.

கடந்த ஆண்டு தீபிகா படுகோனே நடித்த மூன்று படங்களும் ஹிட்டானதைத் தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்கு லைக்குள் குவிந்து இருக்கிறது.கோச்சடையான் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியீட்டிற்கு பிறகு தீபிகாவின் பேஸ்புக்கில் லைக்குள் மழையாக கொட்டத் தொடங்கி விட்டது. மற்ற இந்தி நட்சத்திரங்கள் பத்து மில்லியனுக்கும் குறைவான லைக்குகளை பெற்று மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.

தீபிகா தன் பேஸ்புக்கில் ஒரு மணிக்கு ஒரு முறை அப்டேட் செய்து கொண்டிருப்பதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இதன் மூலம் தீபிகா பேஸ்புக்கின் ராணியாக வர்ணிக்கப்படுகிறார். 20 கோடி சம்பளம் வாங்கி அதிலும் முன்னணியில் இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி