செய்திகள்,திரையுலகம் புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…

புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…

புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவான நிறுவனம் என்று இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியாகி உள்ளன.

இதையடுத்து கத்தி படம் சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, லைகா நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவானது என்ற தகவலில் உண்மை இல்லை.

ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தை தலையிடமாகக் கொண்ட லைகா மொபைல் என்ற நிறுவனத்தின் இந்திய சார்பு நிறுவனம் லைகா புரொடெக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே சேரன் நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை ஞானம் புரொடெக்ஷன் சார்பில் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி