செய்திகள்,திரையுலகம் சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…

சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…

சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!… post thumbnail image
சென்னை:-அப்பா, அண்ணன், மாமா, காமெடியன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் நாசர், தற்போது சைவம் படத்தில் தாத்தாவாக நடித்திருக்கிறார்.இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், சைவம் படத்தில் ஒரு தாத்தா, பேத்திக்கிடையே நடக்கும் நெகிழ்ச்சியான பாசப்போராட்டம் என்று டைரக்டர் சொன்னதுமே இந்த கதை மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்தது. அதனால்தான் கால்சீட் இல்லாதபோதும் அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்தேன். அதோடு, சில படங்களுக்காக உயிரை கொடுத்து நடிப்போம். ஆனால் இந்த படத்துக்காக எனது முன்பக்க தலைமுடியை எடுத்து நடித்தேன்.

அதுமட்டுமின்றி, என் மகன் பாஷாவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கிறான். ஆனால், என் மகன் நடிக்க நான் வாய்ப்பு வாங்கித்தரவில்லை. எனக்கேத் தெரியாமல் டைரக்டர் விஜய், அவனிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகுதான் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. என்னிடம் என் மகன் நடிக்க அனுமதி கேட்டபோது, நானும் அதை தடுக்கவில்லை. நடிகனின் மகன் நடிக்க வருவது ஒன்றும் புதிதில்லையே என்று விட்டுவிட்டேன்.

மேலும், நிஜவாழ்க்கையில் இதுவரை மகனாக பார்த்த பாஷாவை, இந்த படத்துக்காக பேரனாக பார்த்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் ரொம்ப புதுமையாக இருந்தது. அதோடு, முதல் படம் என்கிற பதட்டம் சிறிதும் இல்லாமல் என் மகன் இயல்பாக நடித்தது இன்னும் சந்தோசத்தைக் கொடுத்தது என்கிறார் நாசர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி