அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி… post thumbnail image
மும்பை:-சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி, மும்பையில் இருந்து வெளிவருகிற பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்.‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது’ என்ற முலாயம் சிங் யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது:-

திருமண பந்தத்துக்கு அப்பால், எந்தவொரு பெண்ணும், மற்றொரு ஆணுடன் சம்மதித்தோ அல்லது சம்மதிக்காமலோ செக்ஸ் உறவு கொண்டால், அந்தப் பெண்ணை தூக்கில் போட வேண்டும். கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தில், கற்பழிப்புக்கு தூக்குதான் தண்டனை. ஆனால் இங்கே பெண்களுக்கு எதுவும் நேர்வதில்லை. பெண் குற்றவாளி என ண்டுகொண்டாலும்கூட.
இந்தியாவில் நீங்கள் ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவளோடு செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்தப் பெண் புகார் செய்தால் அது பிரச்சினை ஆகி விடும். இப்போதெல்லாம் இப்படி நிறைய விவகாரங்கள் வருவதைப் பார்க்க முடிகிறது.

தங்களை ஒருவர் தொட்டால் இளம்பெண்கள் புகார் செய்கிறார்கள். அப்படி தொடாவிட்டாலும் புகார் கூறுகிறார்கள். இதனால் அது பிரச்சினையாகிறது. அந்த ஆணின் மதிப்பை சீரழித்து விடுகிறது. சம்மதித்தோ, சம்மதிக்காமலோ கற்பழிப்பு என்று ஒன்று நடந்தால், இஸ்லாமில் கூறி உள்ளபடி தூக்கில் போட வேண்டும்.சரி, கற்பழிப்பு பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டபோது அபு ஆஸ்மி, “ஒரு பெண் திருமணமானாலும் சரி, திருமணமாகாவிட்டாலும் சரி, ஒரு ஆணுடன் செல்கிறாள் என்றால், இருவரையும் தூக்கில் போடவேண்டும். பெண்ணின் சம்மதத்துடன் செக்ஸ் உறவு நடந்தாலும் சரி, அதை அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி