செய்திகள்,திரையுலகம் ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார்!…

ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார்!…

ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார்!… post thumbnail image
கேரளா:-கேரளாவில் தேர்தல் நாளான நேற்று பெரும்பாலான நடிகர், நடிகைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டை பதிவு செய்தனர். நடிகர் சுரேஷ்கோபி திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் பகுதியிலும், ஜெகதீஷ் காலடியிலும், நடிகை காவ்யா மாதவன் எர்ணாகுளத்திலும், ஹன்சிபாகான் கோழிக்கோட்டிலும் ஓட்டு போட்டனர்.

நடிகர் திலீப் ஆலுவாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது தாயாருடன் வந்து ஓட்டு போட்டார். இதுபோல பிரபல நடிகர் மம்முட்டியும் நேற்று பனம்பள்ளி நகரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். ஆனால் அங்கிருந்த வாக்காளர் பட்டியலில் மம்முட்டியின் பெயர் இல்லை. இதனால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மம்முட்டி எர்ணாகுளம் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் அங்கிருந்து பனம்பள்ளி நகருக்கு குடி வந்தார். அப்போது இவர் தனது பெயரை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்க மறந்து விட்டார். இதனால்தான் அவருக்கு ஓட்டுப்போட வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து அவர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி