அரசியல்,செய்திகள் எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…

எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…

எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதையடுத்து ரித்தீஷ் எம்.பி.க்கு தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ரித்தீஷ் எம்.பி. புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இன்று மதியம் ரித்தீஷ் எம்.பி. போயஸ் கார்டன் சென்று முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி