செய்திகள்,திரையுலகம் நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…

நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…

நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!… post thumbnail image
சென்னை:-‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தன்னுடைய அடுத்த படமாக ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமண நிச்சயமாகியிருக்கிறது. ஆகவே, இப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படமே இவருடைய கடைசி படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தை பெரிதும் பாராட்டியதோடு, இதை தானே ரிலீஸ் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் முதல் படமான ‘நேரம்’ படத்தையும் உதயநிதிதான் வெளியிட்டார். தற்போது நஸ்ரியாவின் கடைசி படத்தையும் அவரே வெளியிடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி