அரசியல்,செய்திகள் தபால் மூலம் ஓட்டு போடும் ஜனாதிபதி?…

தபால் மூலம் ஓட்டு போடும் ஜனாதிபதி?…

தபால் மூலம் ஓட்டு போடும் ஜனாதிபதி?… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி அல்லது நிர்மான் பவனில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஜனாதிபதிகள் ஓட்டு போடுவர். ஆனால் இந்த தேர்தலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் ஓட்டுப்போட மாட்டார் என அவரது ஊடக செயலாளர் வேணு ராஜமணி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஆவார். இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்துக்கு சென்றால், மாநில அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்பதால் அவர் தபால் மூலம் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் தபால் மூலம் ஓட்டளிப்பதற்கு தேவையான படிவங்களை அவர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி