செய்திகள்,திரையுலகம் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!…

சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுத மறுத்த பாடலாசிரியர்!… post thumbnail image
சென்னை:-இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய மாட்டேன் என்று அதிரடியாக கவிஞர் அறிவுமதி கூறியிருப்பதால் லிங்குசாமி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்திற்கு கேமிராமேனாக பணிபுரிவதால் அவர் பணிபுரியும் படத்திற்கு தான் பாடல் எழுத முடியாது என்று மறுத்துள்ளார்.

அறிவுமதியும், லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் லிங்குசாமியின் பல படங்களுக்கு அறிவுமதி பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

அறிவுமதி மறுத்துவிட்டதால் தற்போது அவருக்கு பதிலாக அந்த பாடலை பா.விஜய் எழுத இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றான.சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் ஒருவர் பாடல் எழுத மறுத்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி