செய்திகள்,திரையுலகம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 25வது நாளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!…

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 25வது நாளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!…

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 25வது நாளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!… post thumbnail image
சென்னை:-எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.இப்படத்தின் 25–வது நாள் வெற்றி விழா எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

திரையில் எம்.ஜி.ஆரும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் தோன்றும்போது சூடம் காண்பித்து ஆரவாரம் செய்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் ரசிகர்கள் கேசரி வழங்கினார்கள். எம்.ஜி.ஆரின் கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர்.சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ஈஸ்வரன் லட்டு வழங்கினார். திவ்யா பிலிம்ஸ் நிறுவனர் சொக்கலிங்கம், தியேட்டர் மானேஜர் மாரியப்பன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பங்கேற்றனர். ஆயிரத்தில் ஒருவன் படம் ரூ.40 லட்சம் வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி