அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!…

பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!…

பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!… post thumbnail image
கவுகாத்தி:-16வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படுகிறது. 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அசாம் மாநிலத்தில் தேஸ்பூர், காலியாபூர், ஜோர்காட், திப்ருகார், லட்சுமிபூர் ஆகிய 5 தொகுதிகளிலும்,திரிபுராவில் உள்ள 2 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றான திரிபுரா மேற்கு தொகுதியிலும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வழக்கமான ஓட்டுப்பதிவு நேரத்தைவிட கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடைபெறும் 6 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அசாமில் காங்கிரஸ், பா.ஜனதா, திரிணாமூல் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக் என பல கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் பலமுனை போட்டி நிலவுகிறது. 5 தொகுதிகளில் மொத்தம் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி