செய்திகள் நாள் ஒன்றுக்கு ஒரு செங்கல்,3 கிலோ மணல் சாப்பிடும் அதிசய மனிதர்!…

நாள் ஒன்றுக்கு ஒரு செங்கல்,3 கிலோ மணல் சாப்பிடும் அதிசய மனிதர்!…

நாள் ஒன்றுக்கு ஒரு செங்கல்,3 கிலோ மணல் சாப்பிடும் அதிசய மனிதர்!… post thumbnail image
கர்நாடகா:-இந்தியாவில் பக்கிரப்பா ஹுனகுண்டி என்ற பெயர் கொண்ட நபர் தினமும் செங்கல் கற்களை தின்பதற்கு அடிமையாகி உள்ளதால் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து அவர் Barcroft டிவி என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்

சிறுவயதில் இருந்தே நான் மண்ணை தின்று வருவதாகவும், நாளடைவில் செங்கல் கற்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார். இது எனது பொழுது போக்காகவே மாறிவிட்டது என்றும் இதை என்னால் நிறுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.எனது தாயார் மிகவும் ருசியான சிக்கன் உணவுகளை தயாரித்து வைத்திருந்தாலும், அதை நான் சாப்பிட மாட்டேன், நான் மண்ணும், செங்கல்லும் எங்கே இருக்கிறதோ அந்த இடத்தை தேடித்தான் போவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இவர் பிக்கா என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தனது வழக்கமான உணவை சாப்பிட போவதாக கூறியுள்ளார்கூடிய விரைவில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முன்னிலையில் செங்கல் கற்களையும், மணலையும் சாப்பிட்டு அசத்தப்போவதாகவும் இவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி