செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…

மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…

மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு… post thumbnail image
கோலாலம்பூர்:-239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8ம் தேதி மலேசிய விமானம் மாயமானது.

இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதி கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மலேசியா அறிவித்தது.

இந்த வழக்கில், விமானம் மாயமான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இனி வழியே இல்லை என கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் அறிவித்தார்.இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில், விசாரணை நடக்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் விமானம் மாயமாகப்போனதின் உண்மையான காரணம் தெரியவில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி