செய்திகள்,திரையுலகம் நீண்ட இடைவெளிக்குப்பின் படம் இயக்கும் சரண்!…

நீண்ட இடைவெளிக்குப்பின் படம் இயக்கும் சரண்!…

நீண்ட இடைவெளிக்குப்பின் படம் இயக்கும் சரண்!… post thumbnail image
சென்னை:-அஜீத் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வினய் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக மும்பை கல்லூரி மாணவி ஒருவரும் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வினய் இருவேடங்களில் நடிக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. வினய் ஏற்கனவே சரண் இயக்கத்தில் மோதி விளையாடு என்ற படத்தில் நடித்தவர்.

இந்த படத்திற்கு சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைக்கிறார். படத்தை சரண், சொந்தமாகவே தயாரிக்கிறார். ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என்றும், டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும் என சரண் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி