செய்திகள்,திரையுலகம் தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…

தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!…

தன்னை யாரும் முத்தமிடவில்லை என கூறிய நடிகை நக்மா!… post thumbnail image
மும்பை:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நடிகை நக்மாவின் கன்னத்தில் மீரட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முத்தமிட முயற்சித்தார். அவரை தள்ளிவிட்டு நக்மா கோபமாக சென்றார். இது டிவியில் ஒளிபரப்பானது.

இதன் பின்னர் மற்றொரு சமயம் தன்னை கட்டிப்பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரை நக்மா கன்னத்தில் அறைந்தார். இதுவும் டிவியில் ஒளிபரப்பானது.இதை தொடர்ந்து நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தன்னை யாரும் முத்தமிடவில்லை என்றும் யாரையும் தான் கன்னத்தில் அறையவில்லை என்றும் நக்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், என்னை முத்தமிட்டதாக கூறப்படும் எம்எல்ஏ என்னை மகளாக நடத்தினார்.
அவர் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதனை மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டன. அதே போல் யாரையும் நான் கன்னத்தில் அறையவும் இல்லை. மீரட்டுக்கு செல்ல மாட்டேன் என எந்த சமயத்திலும் கூறவும் இல்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி