செய்திகள்,திரையுலகம் சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…

சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!…

சூர்யாவுடன் நடிக்கும் பாலிவுட் நடிகை கரீனா கபூர்!… post thumbnail image
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா,சமந்தா நடித்து வரும் படம் ‘அஞ்சான்’. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு கலக்கல் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருக்கிறாராம். அவர் வேறு யாருமல்ல, கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொண்ட நடிகை கரினா கபூர்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இவர் நடிக்கப் போகிறாராம்.சமீபகாலமாக பாலிவுட் நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பது என்பது பரவலாகி வருகிறது. ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து கரீனா கபூரும் தமிழில் உருவாகும் ‘அஞ்சான்’ படத்தில் நடிக்கவிருப்பது, பிற பாலிவுட் நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.‘அஞ்சான்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி