அரசியல்,செய்திகள் பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!… post thumbnail image
பீகார்:-பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த மாவட்டமான நாலந்தாவில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிலர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். நாலந்தாவில் சாலை வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதிஷ் குமார் அரசு தவறி விட்டது எனக் கூறி நிதிஷ் குமார் மீது கற்கள் வீசப்பட்டன.

இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.இதையடுத்து பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் கோபால் பிரசாத் சின்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய குஷ்ரூபூர் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார் முதல்வர் நிதிஷ் குமார். பிரசார கூட்டத்தில் பேசிவிட்டு, ஹெலிகாப்டரில் ஏறச் சென்ற நிதிஷ் குமார் மீது திடீரென செருப்புகள் வீசப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார், ‘‘எதிர்கட்சியினரின் சதி காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி