செய்திகள் ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…

ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…

ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!… post thumbnail image
புதுடெல்லி:-தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சமூக கண்ணோட்டத்தில் சலுகை விலையில் பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, தேர்தல் நடக்கும் அன்று சாவடிக்கு சென்று ஓட்டளித்து விட்டு வந்து, விரலில் உள்ள மையை காட்டினால், லிட்டருக்கு 50 பைசா குறைவாக பெட்ரோல், டீசல் வழங்கப்படும்.
இதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து பங்க் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் இந்த சலுகையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சில பெட்ரோல் பங்க் டீலர்கள் கூறினர்.

எனினும் குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர். உதாரமாக டெல்லியில் 400க்கும் மேற்பட்ட பங்க்குகள் உள்ளன. அவற்றில் இப்போதைக்கு சலுகை விலையில் பெட்ரோல் வழங்க 10 பங்க் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி