செய்திகள்,திரையுலகம் நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…

நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…

நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!… post thumbnail image
சென்னை:-சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தவர் சார்மி. அதன்பிறகு ஆஹா எத்தனை அழகு உள்பட சில படங்களில் நடித்தவர்.சில படங்களில் சார்மியின் கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட நடிகைகளையே அதிர வைத்தது. அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து கலக்கி எடுத்தார் சார்மி.

இருப்பினும் தற்போது அவருக்கு வயதாகி விட்டதால் அவரது கவர்ச்சிக்கு மவுசு குறைந்து விட்டது. அதனால் குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்தபோதும் சார்மியால் மார்க்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அதனால், இதுவரை தனது காதலரான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இலைமறை காய்மறையாக மட்டுமே பழகி வந்த சார்மி. தற்போது வெளிப்படையாகவே அவருடன் ஊர் சுற்றத் தொடங்கியிருக்கிறார்.

அப்படி ஜாலி டூர் அடிக்கும்போது நீச்சல் உடையணிந்து, காதலரோடு இன்ப நீராடுகிறாராம் நடிகை.ஆனால் அப்படி அவர்கள் கவர்ச்சிக்குளியல் போடுவதை யாரோ படம் பிடித்து இணையதளங்களிலும் வெளியிட்டு பப்ளிக் சேவை செய்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த சார்மி, இதுகுறித்து ஆந்திர போலீசில் புகார் செய்து விட்டாராம்.சார்மியின் புகார் எதிரொலியாக அவரது நீச்சல் உடை படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர்கள், உடனடியாக நீக்கி விட்டார்களாம். இதனால் இந்த பிரச்னையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று விசயத்தை கமுக்கமாக முடித்துக்கொண்டுள்ளாராம் சார்மி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி