அரசியல்,செய்திகள்,திரையுலகம் சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…

சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…

சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!… post thumbnail image
மும்பை:-பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழில் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தேர்தலில் குதித்துள்ளார். மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சுயேச்சையாக நிற்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, மக்கள் உரிமைகள் பறிபோய் உள்ளன. அவர்களுக்காக போராட தேர்தலில் நிற்கிறேன். பெண்கள் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபடுவேன்.எனக்கு அரசியல் தெரியாது. அரசியல்வாதியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறியவில்லை.சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். எனது நோக்கம் எல்லாம் சமூகத்துக்கு நல்ல சேவை செய்ய வேண்டும். என்பதுதான்.பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை. மக்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். எனவே நிற்கிறேன்.

கடந்த 7 வருடங்களாக ஏராளமான சமூக சேவை பணிகள் செய்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம். டெல்லி போல் மும்பை ஆகி விடக்கூடாது. பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். அவர்கள் கராத்தே கற்க வேண்டும் என்றார்.ராக்கி சாவந்த் ஏற்கனவே நரேந்திர மோடியை பாராட்டி பேட்டி அளித்து இருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா சார்பில் மேற்கு வங்காளம் ஸ்ரீராம்பூரில் நிற்க டிக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் மொழி தெரியாததால் அங்கு போட்டியிட மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி