அரசியல்,செய்திகள் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டி!…

மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டி!…

மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டி!… post thumbnail image
வாரணாசி:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி 2 தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத்தில் வதோதராவிலும் போட்டியிடுகிறார்.இதில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்தது. அவரும் போட்டியிடும் ஆர்வத்தில்தான் உள்ளார்.

ஆனால் வாரணாசி தொகுதி மக்களின் கருத்தை அறிந்த பிறகுதான் மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.அதன்படி கெஜ்ரிவால் இன்று தனது முடிவை அறிவிக்கிறார்.அந்த பகுதி மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் இன்று காலை வாரணாசி சென்றார். ஆம்ஆத்மி தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது பற்றி அந்த பகுதி மக்களின் கருத்தை அறிந்து கொள்கிறார். முதலில் அவர் பெனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியாளர்களை சந்திக்கிறார். பின்னர் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்கிறார்.மாலையில் பெனியாபாக் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது அவர் பொது மக்களிடம் போட்டியிடுவது பற்றி வாக்கெடுப்பு நடத்துகிறார். பின்னர் வாரணாசியில் போட்டியிடுவாரா? என்பது பற்றிய முடிவை அறிவிப்பார்.
முன்னதாக கெஜ்ரிவால் கூறும்போது, ‘‘வாரணாசியில் மோடி தோற்றால் குஜராத்துக்கு திரும்பி விட வேண்டும்’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி