செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…

தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…

தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு… post thumbnail image
புதுடில்லி:-சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல் கமிட்டி விசாரித்து வருகிறது. ஆனால் நாங்களே விசாரித்து கொள்கிறோம், என கிரிக்கெட் வாரியம் கூறியது. பல்வேறு அரசியல் கட்சியினர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என குரல் கொடுத்தது. ஆனால் இந்த பதவியில் இருந்து விலக மாட்டேன் என அடம் பிடித்து வந்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள். சீனிவாசன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் சீனிவாசன் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். மறுக்கும் பட்சத்தில் நாங்களே ஆணை பிறப்பிக்க வேண்டியதாக இருக்கும். பதவி விலகும் வரை சீனிவாசன் தரப்பின் வாதங்கள் எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. இவர் பதவி விலகாமல் இருப்பது அருவருக்கத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மிக வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. இவ்வாறு கடுமையாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் சீனிவாசன் உடனடியாக பதவி விலகலை அறிவிப்பார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி