செய்திகள்,திரையுலகம் நடிகர் சஞ்சய்தத் மீண்டும் சிறையில் அடைப்பு!…

நடிகர் சஞ்சய்தத் மீண்டும் சிறையில் அடைப்பு!…

நடிகர் சஞ்சய்தத் மீண்டும் சிறையில் அடைப்பு!… post thumbnail image
மும்பை:-மும்பையில் 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அப்போது சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 1½ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் வெளியே வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சஞ்சய்தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் எஞ்சிய 3½ ஆண்டு சிறைக்காக சரண் அடைந்தார். அவர் புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சஞ்சய்தத் 15 நாட்கள் பரோலில் வந்தார்.இந்த பரோல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்த பிறகு அவர் சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே சஞ்சய்தத்தின் மனைவி மானியதாவுக்கு இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் பரோல் கேட்டார். அவருக்கு ஒரு மாதம் பரோல் அனுமதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வெளியே வந்தார். ஜனவரி 21–ந் தேதியுடன் அவரது பரோல் முடிந்தது. மனைவி அருகே இருக்க வேண்டி இருப்பதாக கூறி ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு கேட்டார். இதையடுத்து மேலும் ஒரு மாதம் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பு கேட்டதால் 2–வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது.சஞ்சய்தத்தின் பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் மேலும் நீட்டிப்பு கேட்டு மனுசெய்யவில்லை. இதனால் அவர் இன்று சிறைக்கு திரும்ப வேண்டும். பரோல் முடிவடைந்ததை தொடர்ந்து சஞ்சய்தத் இன்று புனே ஏரவாடா சிறைக்கு திரும்புகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி