செய்திகள்,தொழில்நுட்பம் டுவிட்டருக்கு தடை!…

டுவிட்டருக்கு தடை!…

டுவிட்டருக்கு தடை!… post thumbnail image
அங்காரா:-வரும் 30-ம் தேதி துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘முக்கிய திருடன்’, ‘திருடனின் மகன்கள்’ என்ற புனைப்பெயரில் பிரதமர் குடும்பம், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை டுவிட்டர் மூலம் சிலர் ஆதாரத்துடன் பரப்பி வந்தனர்.

இதனையடுத்து, கோர்ட்டின் அனுமதியுடன் துருக்கி நாட்டு மக்களுக்கு டுவிட்டர் இணைப்பு கிடைப்பதை தடை செய்து பிரதமர் எர்டோகன் தடை விதித்துள்ளார்.இந்த தடை குறித்து உலக நாடுகள் என்ன கூறுகின்றன.என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதன் மூலம் துருக்கி குடியரசின் வல்லமையை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்.என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டித்து வரும் அதே வேளையில், துருக்கியில் வாழும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த தடை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வோடாஃபோனின் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஊழல் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் எப்போதும் போல் அவர்கள் இப்போதும் பதிவேற்றம் செய்து கொண்டுதான் உள்ளனர்.ஈரான், லிபியா, வெனிசுலா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்கனவே டுவிட்டர் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் டுவிட்டர் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி