அரசியல்,செய்திகள்,திரையுலகம் பவன் கல்யாண் என் முக்கிய எதிரி!… சூப்பர் ஸ்டாரின் ஆவேசத்தால் பரபரப்பு…

பவன் கல்யாண் என் முக்கிய எதிரி!… சூப்பர் ஸ்டாரின் ஆவேசத்தால் பரபரப்பு…

பவன் கல்யாண் என் முக்கிய எதிரி!… சூப்பர் ஸ்டாரின் ஆவேசத்தால் பரபரப்பு… post thumbnail image
ஐதராபாத்:-மத்திய மந்திரியும், காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவருமான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ‘ஜனசேனா’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘‘தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன்’’ என்றார்.பவன்கல்யாண் புதிய கட்சி குறித்து அண்ணன் சிரஞ்சீவி கூறியதாவது:–

ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் பவன்கல்யாண் ‘ஜனசேனா’ என்ற கட்சியை தொடங்கி உள்ளார். ஒரு அண்ணன் என்ற முறையில் எனது ஆசி அவருக்கு எப்போதும் உண்டு.அதே நேரத்தில் காங்கிரசை அழிப்பேன் என்று அவர் கூறுவதை காங்கிரஸ்காரன் என்ற முறையில் எதிர்க்கிறேன். காங்கிரசை எதிர்க்கும் அவர் எனக்கு முக்கிய எதிரிதான்.

அவர் மட்டும் அல்ல யார் காங்கிரசை எதிர்த்தாலும் அவர்கள் எனது எதிரிதான்.ஆந்திரா முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் பாதயாத்திரை செல்கிறேன்.அப்போது காங்கிரஸ் மீது சுமத்தப்படும் வீண்பழியை துடைக்கும் வகையில் பிரசாரம் செய்வேன். காங்கிரசை அழிக்க முடியாது என்பது அனைவருக்கும் பின்னர் தெரியவரும்.இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி