செய்திகள்,திரையுலகம் விவசாயியை திருமணம் செய்ய விரும்பும் முதல் இந்திய நடிகை!…

விவசாயியை திருமணம் செய்ய விரும்பும் முதல் இந்திய நடிகை!…

விவசாயியை திருமணம் செய்ய விரும்பும் முதல் இந்திய நடிகை!… post thumbnail image
சென்னை:-சுட்டபழம், திருடிய இதயத்தை, மச்சி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை சுபா புஞ்சா.இவர் தனது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருக்கிறாராம்.

இயற்கையோடு ஒன்றி வாழ்வதே தனது எண்ணம் என்று கூறும் சுபா, ஒரு விவசாயியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். வித்தியாசமான இப்படியொரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்றபோது,இயற்கையுடன் இணைந்து வாழ்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கென்று நிறைய விவசாய நிலங்கள் இருக்கிறது. இதனால் நடிப்பை மட்டுமே நான் நம்பிக்கொண்டிருக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டுவிடுவேன். இயற்கையோடு இணைந்து வாழும் ஒரு விவசாயியைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி